అధ్యాయం 14: குண த்ரய விபாக யோகம்

பொருள் இயற்கையின் மூன்று முறைகளை புரிந்துகொள்வதன் மூலம் யோகம்

முந்தைய அத்தியாயம் ஆன்மாவிற்கும் ஜட உடலுக்கும் உள்ள வேறுபாட்டை விரிவாக விளக்கியது. இந்த அத்தியாயம் பொருள் ஆற்றலின் தன்மையை விவரிக்கிறது, இது உடல் மற்றும் அதன் கூறுகளின் மூலமாகும்,. இவ்வகையாக இது மனம் மற்றும் பொருள் இரண்டின் தோற்றம் ஆகும். ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகிறார், ஜட இயற்கையானது நன்மை, ஆர்வம் மற்றும் அறியாமை. ஆகிய மூன்று முறைகளால் (குணங்கள்) கட்டமைக்கப்பட்டுள்ளது.. மேலும் நமது இருப்பில் உள்ள முறைகளின் கலவையானது நமது ஆளுமையின் நிறத்தை தீர்மானிக்கிறது .நன்மையின் முறை அமைதி, நல்வாழ்வு, நல்லொழுக்கம் மற்றும் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது; உணர்ச்சிகளின் முறை உலக ஈர்ப்புகளுக்கான முடிவில்லா ஆசைகளையும், தீராத லட்சியங்களையும் அதிகரிக்கிறது; மற்றும் அறியாமை முறை மாயை, சோம்பல், போதை மற்றும் தூக்கத்திற்கு காரணமாகிறது. ஆன்மா ஆன்மீக பிரகாசம் அடையும் வரை, ஜட இயற்கையின் இந்த மூன்று அதீத சக்தி வாய்ந்த சக்திகளை சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். விடுதலை-முக்தி என்பது இந்த மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டது

இந்த குணங்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கான எளிய தீர்வை ஸ்ரீ கிருஷ்ணர் வெளிப்படுத்துகிறார். ஒப்புயர்வற்ற பகவான் மூன்று முறைகளுக்கும் அப்பாற்பட்டவர், நாம் அவருடன் இணைந்தால், நம் மனமும் தெய்வீக தளத்திற்கு உயரும். இந்த கட்டத்தில், அர்ஜுனன் மூன்று குணங்களுக்கு அப்பால் சென்றவர்களின் குணாதிசயங்களைப் பற்றி விசாரிக்கிறார். ஸ்ரீ கிருஷ்ணர் அப்படிப்பட்ட விடுதலை பெற்ற ஆன்மாக்களின் பண்புகளை முறையாக விளக்குகிறார். ஆன்மீக பிரகாசம் அடைந்த ஒளிமயமான நபர்கள் எப்போதும் சமநிலையில் இருப்பார்கள் என்று அவர் விளக்குகிறார்; அவர்கள் உலகில் குணாதிசயங்கள் செயல்படுவதையும், அதன் விளைவுகள் மனிதர்கள், பொருள்கள் மற்றும் சூழ்நிலைகளில் வெளிப்படுவதையும் கண்டு கவலைப்படுவதில்லை. அவர்கள் எல்லாவற்றையும் கடவுளின் ஆதிக்கத்திலுள்ள ஆற்றலின் வெளிப்பாடாக கருதுகிறார்கள். இவ்வாறாக, உலக சூழ்நிலைகளால் இவர்கள் மகிழ்ச்சி அடைவதோ அலைக்கழிக்க படுவதோ இல்லை. அவர்கள் சுயத்தில் நிலை பெற்றிருக்கின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர். மீண்டும் பக்தியின் சக்தியையும், மற்றும் நம்மை நமது மூன்று குணங்களையும் கடந்து செல்ல வைக்கும் அதனது திறனையும் நமக்கு நினைவூட்டுவதுடன் அத்தியாயம் முடிகிறது.

భగవద్గీత 14.1 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஒப்புயர்வற்ற பகவான் கூறினார்: எல்லா அறிவிலும் சிறந்த எந்த உன்னதமான ஞானத்தை அறிவதன் மூலம் எல்லா மகான்களும் உயர்ந்த பரிபூரணத்தை அடைந்தார்களோ அந்த உன்னதமான ஞானத்தை நான் மீண்டும் உனக்கு விளக்குகிறேன்.

భగవద్గీత 14.2 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

இந்த ஞானத்தில் அடைக்கலம் புகுந்தவர்கள் என்னுடன் ஐக்கியமாகி விடுவார்கள். அவர்கள் படைப்பின் போது மீண்டும் பிறக்க மாட்டார்கள் அல்லது கலைக்கும் நேரத்தில் அழிக்கபடமாட்டார்கள்.

భగవద్గీత 14.3 - 14.4 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

பொருள் இயற்கையே (ப்ரகி1ரிதி1 அல்லது மாயா), கருவறை. நான் அதை தனிப்பட்ட ஆத்மாக்களால் செறிவூட்டுகிறேன், இதனால் அனைத்து உயிரினங்களும் பிறக்கின்றன. ஓ குந்தியின் மகனே, உற்பத்தியாகும் அனைத்து உயிரினங்களுக்கும் பொருள் இயற்கையே கருப்பை, நான் விதை தரும் தந்தை.

భగవద్గీత 14.5 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஓ வலிமையான கைகளை உடைய அர்ஜுனா, பொருள் ஆற்றல் மூன்று குணங்களைக்(முறைகள்)— கொண்டுள்ளது ஸத்வ (நன்மை), ரஜஸ் (ஆர்வம்), மற்றும் தமஸ் (அறியாமை). இந்த குணங்கள் அழியாத ஆன்மாவை மரண உடலுக்கு அடிமைப்படுத்துகின்றன.

భగవద్గీత 14.6 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

இவற்றில், நன்மையின் முறையான ஸத்வ குணம், , மற்றவற்றை விட தூய்மையானது, ஒளிமயமானது மற்றும் நல்வாழ்வு நிறைந்தது, பாவம் செய்யாத அர்ஜுனனே, அது மகிழ்ச்சி மற்றும் அறிவின் உணர்விற்கான இணைப்பை உருவாக்குவதன் மூலம் ஆன்மாவை பிணைக்கிறது.

భగవద్గీత 14.7 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஓ அர்ஜுனா, பேரார்வத்தின் தன்மை பற்றுதல். இது உலக ஆசைகள் மற்றும் ஈர்ப்புகளிலிருந்து எழுகிறது மற்றும் பற்றுதலின் மூலம் ஆன்மாவை கர்மாவின் பலன்களுடன் பிணைக்கிறது.

భగవద్గీత 14.8 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஓ அர்ஜுனா, அறியாமையால் பிறக்கும் தமோ குணம், உருவத்துடன் கூடிய ஆத்மாக்களுக்கு மாயையை உண்டாக்குகிறது. அலட்சியம், சோம்பேறித்தனம், உறக்கம் ஆகியவற்றின் மூலம் எல்லா உயிர்களையும் ஏமாற்றுகிறது.

భగవద్గీత 14.9 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

நன்மையின் முறை (ஸத்வ குணம்) ஒருவரை பொருள் மகிழ்ச்சியுடன் பிணைக்கிறது; ஆர்வத்தின் முறை (ரஜஸ்) ஆன்மாவை செயல்களை நோக்கி நிலைப்படுத்துகிறது; மற்றும் அறியாமையின் முறை (தமஸ்) அறிவைச் சூழ்ந்து ஆன்மாவை மாயையுடன் பிணைக்கிறது.

భగవద్గీత 14.10 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

சிலநேரங்களில் ஸத்துவகுணம், ரஜோ குணம், மற்றும் தமோ குணம் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது. சில சமயங்களில் ரஜோகுணம் ஸத்வ குணத்தையும் தமோகுணத்தையும் ஆதிக்கம் செலுத்துகிறது, மேலும் சில சமயங்களில் ஸத்வ குணம் மற்றும் ரஜோகுணத்தை விட தமோகுணம் மேலோங்குகிறது.

భగవద్గీత 14.11 - 14.13 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

உடலின் அனைத்து வாயில்களும் அறிவால் ஒளிரும் போது, ​​அதை நன்மை முறையின் (ஸத்வகுணம்) வெளிப்பாடாகக் கருதவும். உணர்ச்சி முறை (ரஜோ குணம்) மேலோங்கும் போது, ​​அர்ஜுனா! மோகம் பேராசை, உலக இன்பங்களுக்காக உழைப்பு, அமைதியின்மை மற்றும் ஏக்கம் ஆகியவற்றின் அறிகுறிகள் உருவாகின்றன. அர்ஜுனா! செயலற்ற தன்மை, கவனக்குறைவு மற்றும் குழப்பம் ஆகியவை அறியாமை முறையின் (தமோ குணம்) முக்கிய அறிகுறிகளாகும்.

భగవద్గీత 14.14 - 14.15 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

நன்மை முறையின் ஆதிக்கத்தால் இறந்தவர்கள், கற்றவர்களின் தூய இருப்பிடங்களை (உணர்ச்சி மற்றும் அறியாமை இல்லாத) அடைகிறார்கள். பேரார்வம் அதிகமாகி இறப்பவர்கள் வேலையால் உந்தப்பட்ட மக்களிடையே பிறக்கிறார்கள், அறியாமையால் இறப்பவர்கள் மிருக ராஜ்யத்தில் பிறக்கிறார்கள்.

భగవద్గీత 14.16 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

நல்வழியில் செய்யப்படும் செயல்களின் பலன், தூய்மையான பலனைத் தருவதாகக் கூறப்படுகிறது. ஆர்வத்தின் முறையின் படி செய்யும் செயல்கள் வலியை விளைவிக்கின்றன, அதே சமயம் அறியாமை முறையில் செய்யப்படுவது இருளில் விளைகிறது.

భగవద్గీత 14.17 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

நல்வழியில் இருந்து அறிவும், உணர்ச்சி முறையில் பேராசையும், அறியாமையிலிருந்து அலட்சியமும் மாயையும் உருவாகின்றன.

భగవద్గీత 14.18 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

நன்மையின் முறையில் அமைந்தவர்கள் மேல்நோக்கி உயர்கின்றனர்; உணர்ச்சி கொண்டவர்கள் நடுவில் இருப்பார்கள்; அறியாமை நிலையில் உள்ளவர்கள் கீழ்நோக்கி செல்கின்றனர்.

భగవద్గీత 14.19 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

எல்லாச் செயல்களிலும் இயற்கையின் மூன்று குணங்களைத் தவிர வேறு இல்லை என்பதைக் கண்டு, என்னை இந்த மூன்று குணங்களும் அப்பாற்பட்டவராக காண்பவர்கள் என் தெய்வீகத் தன்மையை அடைகிறார்கள்.

భగవద్గీత 14.20 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஒருவர் உடலுடன் தொடர்புடைய ஜட இயற்கையின் மூன்று முறைகளைக் கடந்து, பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் துன்பம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, அழியாத தன்மையை அடைகிறார்.

భగవద్గీత 14.21 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அர்ஜுனன் வினவினார்: இறைவா, மூன்று குணங்களைக் கடந்தவர்களின் குணாதிசயங்கள் என்ன? அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள்? குணங்களின் அடிமைத்தனத்தை அவர்கள் எவ்வாறு கடந்து செல்கிறார்கள்?

భగవద్గీత 14.22 - 14.23 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஒப்புயர்வற்ற தெய்வீக ஆளுமை கூறினார்: ஓ அர்ஜுனா, மூன்று குணங்களுக்கு அப்பாற்பட்டவர்கள், வெளிச்சத்தையோ (ஸத்வத்தால் பிறந்தது), செயலையோ (ராஜஸால் பிறந்தது) அல்லது மாயையையோ (தமஸால் பிறந்தது) அவை ஏராளமாக உள்ள போது கூட வெறுக்க மாட்டார்கள். அல்லது அவை இல்லாதபோது அவர்கள் அவைகளுக்காக ஏங்குவதில்லை. அவர்கள் இயற்கையின் முறைகளுக்கு நடுநிலை வகிக்கிறார்கள் மற்றும் அவற்றால் தொந்தரவு செய்யப்படுவதில்லை.

భగవద్గీత 14.24 - 14.25 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

சுகத்திலும், துக்கத்திலும் சமமாக இருப்பவர்கள், தன்னம்பிக்கை உள்ளவர்கள், மண், கல், பொன் ஆகியவற்றை சமமாகப் பார்ப்பவர்கள், விரும்பத்தக்க மற்றும் விரும்பத்தகாத நிகழ்வுகளில் சமமாக இருப்பவர்கள். அவர்கள் புத்திசாலிகள், பழியையும் புகழையும் சமமாக ஏற்றுக்கொள்பவர்கள்; குற்றச்சாட்டுகளையும் அவமானங்களையும் எதிர்கொள்வதில் சமமாக இருப்பவர்கள்; பகைவனையும் நண்பனையும் சமமாக நடத்துவார்கள்; எல்லா பொருளாசையையும் துறந்தவர்கள், மூன்று குணங்களுக்கும் மேலாக உயர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

భగవద్గీత 14.26 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

கலப்பற்ற பக்தியுடன் எனக்கு சேவை செய்பவர்கள் ஜட இயற்கையின் முப்பரிமாணங்களைக் கடந்து பிரம்ம நிலைக்கு வருவார்கள்.

భగవద్గీత 14.27 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

நான் உருவமற்ற, அழியாத, நித்திய தர்மத்தின் மற்றும் முடிவில்லாத தெய்வீக பேர் இன்பமான ப்ரஹ்மத்தின் அடிப்படை.
Swami Mukundananda
14. குண த்ரய விபாக யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency